2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நாட்பட்ட சிறுநீரக நோய்த் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் - 2019 - நாட்டின் பல்வேறுபட்ட பிரதேசங்களிலிருந்து அறியக்கிடைத்துள்ள நாட்பட்ட சிறுநீரக நோயை கட்டுப்படுத்துவதற்காக சிறுநீரக நோய் தடுப்பு சனாதிபதி செயலணி தாபிக்கப்பட்டதோடு, இதன் மூலம் கூட்டு அணுகு முறையின் ஊடாக பல்வேறுபட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களை இணைத்துக் கொண்டு, சிறுநீரகநோய் தடுப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சித்திட்டங்களின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை மேலும் வெற்றிகொள்வதற்கு இந்த நிகழ்ச்சித்திட்டத்தை 2019 ஆம் ஆண்டு சார்பிலும் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பொருட்டிலான வருடாந்த செயற்பாட்டு திட்டமொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வருடாந்த செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |