2019-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2018/2019 பெரும்போகத்தில் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - 2018/2019 பெரும்போகத்திற்கான அறுவடை ஆரம்பமாகவுள்ளதோடு, நெல்லுக்கான நிரந்தர விலையினை பேணுவதற்கும் விவசாயிகளின் நெல்லுக்கு நியாயமான விலையினை வழங்கும் பொருட்டும் இந்த போகத்தில் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை மாவட்ட செயலாளர்களின் வழிநடத்தலின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் ஊடாக சம்பா வகை நெல் சார்பில் கிலோ ஒன்றுக்கு 41/- ரூபாவும் நாடு மற்றும் ஏனைய வகை நெல் சார்பில் கிலோ ஒன்றுக்கு 38/- ரூபாவுமாக அத்தாட்சிப்படுத்தப்பட்ட விலையின் கீழ் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதற்கிணங்க, இம்முறை பெரும்போகத்தில் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான 5,000 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினை வழங்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |