2019-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கிராமிய பாலங்களை நிர்மாணித்தல் - நாட்டின் பல்வேறுபட்ட பிரதேசங்களை இணைப்பதன் மூலம் போக்குவரத்து தொடர்புகளை விருத்தி செய்வதன் ஊடாக தேசிய அபிவிருத்தி நலன்களை நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களுக்கும் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கிராமிய பிரதேசங்களில் 4,000 பாலங்களை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க நாட்டின் 9 மாகணங்களையும் தழுவும் விதத்தில் பல்வேறு அளவுகளிலான 175 பாலங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு ஐக்கிய இராச்சியத்தின் Cleveland Bridge UK Limited நிறுவனத்திற்கு 37.7 மில்லியன் ஸ்ரேலிங் பவுன்கள் கொண்ட தொகைக்கு கையளிக்கும் பொருட்டு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |