• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொலன்னாவை மழைநீர் வடிகால் மற்றும் சூழல் மேம்பாட்டு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
- கடந்த நான்கு தசாப்த கால பகுதிக்குள் நிகழ்ந்த நகரமயப்படுத்தல் மற்றும் போதுமான வடிகாலமைப்பு முறைமை இல்லாமையினால் கொலன்னாவை ஆற்றுபடுகையானது வருடாந்தம் வௌ்ளப்பெருக்குக்கு உள்ளாகின்றது. இது எதிர்கால முதலீட்டு திட்டமிடலுக்கும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கும் தடையாக உள்ளது. ஆதலால், களனி கங்கைக்கு நேரடியாக தொடர்புடைய கித்தம்பகுவ, செலலிஹினி மாவத்தை மற்றும் தண்டுதொட்ட கால்வாய்களை அபிவிருத்தி செய்து அத்துமீறி காணிகளை நிரப்புதல் மற்றும் காணி சுவீகரித்தலைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கிணங்க 2019 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் கொலன்னாவை மழைநீர் வடிகால் மற்றும் சூழல் மேம்பாட்டு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.