• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உலக நிதியத்தின் மூலம் வழங்கப்படும் கொடைகளை பயன்படுத்தி 2019 - 2021 கால பகுதியில் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- உலகளாவிய ரீதியில் தாக்கத்தைச் செலுத்தியுள்ள சுகாதார பிரச்சினையான எயிட்ஸ், காச நோய் மற்றும் மலேரியா போன்ற மூன்று தொற்றுநோய்களை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு நிதி வழங்குவதற்காக உலகநிதியமானது தாபிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சானது ஏற்கனவே 76 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கொடைகளை பெற்றுக் கொள்வதற்கு உடன்படிக்கைகளை செய்துகொண்டுள்ளதோடு, இவற்றுள் 61 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கொடையினை பயன்படுத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. உலக நிதியத்தினால் 2019 - 2021 காலப் பகுதியின் சார்பில் 12.3 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கொடை ஒதுக்கப்பட்டுள்ளதோடு, இந்தக் கொடையினை பெற்றுக் கொள்வதற்காக செய்துகொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கை சம்பந்தமாக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.