2019-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
முல்லைத்தீவு - கொக்கிளாய் - புல்மோட்டை பாதையின் கொக்கிளாய் களப்பு ஊடாக கொக்கிளாய் பாலத்தையும் அதன் நுழைவுப் பாதைகளையும் நிர்மாணித்தல் - கிழக்கு மாகாணத்திற்கும் வட மாகாணத்திற்கும் இடையில் கரையோர பகுதியில் நிலத்துடனான இணைப்பினை ஏற்படுத்தும் பொருட்டு முல்லைத்தீவு - கொக்கிளாய் - புல்மோட்டை பாதையை அபிவிருத்தி செய்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. கொக்கிளாய் களப்பு ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள இந்த பாலத்தின் மூலம் முல்லைத்தீவுக்கும் புல்மோட்டைக்கும் இடையிலான தூரம் சுமார் 100 கிலோ மீற்றர்களால் குறையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் கருத்திட்டத்திற்கு செக் குடியரசின் CSOB வங்கியிடமிருந்தும் உள்ளூர் வர்த்தக வங்கி ஒன்றிடமிருந்தும் நிதி வசதிகளை பெற்றுக் கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளதோடு, இதற்கிணங்க இந்த வங்கிகளுடன் கடன் இணக்கப் பேச்சுக்களை நடாத்தும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |