2019-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நலனோம்பல் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு பயனாளிகளை தெரிவுசெய்யும் வழிமுறையொன்றை வகுத்தல் - நாட்டில் செயற்படுத்தப்பட்டுவரும் பல்வேறுபட்ட நலனோம்பல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நன்மைகளை பெறுவதற்கு பொருத்தமானவர்களை தெரிவுசெய்வதற்கு சிறந்த வௌிப்படை தன்மை கொண்ட வழிமுறையொன்றை உருவாக்குவதற்கு நலனோம்பல் நன்மைகள் தகவல் முறைமையொன்றை தாபிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க நன்மைகளின் பொருட்டு விண்ணப்பிக்கும் முறை, தெரிவுக் குழுக்கள் மற்றும் மேன்முறையீட்டு குழுக்களை தாபித்தல், அவற்றுக்கு நியமனங்களை செய்வதற்கான தகைமைகள், இந்தக் குழுக்களின் பொறுப்புக்கள், விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின் பிழையற்ற தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதில் பயன்படுத்த வேண்டிய வழிமுறைகள், பயனாளிகளை நிகழ்ச்சித்திட்டங்களில் உள்வாங்குதல், மேன்முறையீடு சம்பந்தமாக செயலாற்ற வேண்டிய முறை பற்றிய ஏற்பாடுகள் என்பனவற்றை உள்ளடக்கி 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 27 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்கு விதிகளை சட்டவரைநருக்கு தொடர்புபடுத்தும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |