2019-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அங்கவீனமுற்று ஓய்வுபெற்ற அல்லது விலகிச் சென்ற முப்படைகளையும் சேர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் - பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அங்கவீனமுற்று இந்த அங்கவீனமுற்ற நிலையானது 50 சதவீதத்தைவிட குறைந்ததன் காரணமாக உரிய சேவைக்காலத்தை பூர்த்தி செய்து ஓய்வுபெற்றுள்ள 1573 முப்படைகளையும் சேர்ந்த உறுப்பினர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய இளைப்பாறிய முப்படைகளையும் சேர்ந்த மேலும் 792 உறுப்பினர்களுக்கும் உரிய நிவாரணங்களை வழங்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |