2019-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பொலிஸ் பயிலுநர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பிரிவு மற்றும் தகவல் தொழினுட்ப பிரிவு என்பன நடாத்திச் செல்லப்படும் கட்டடத்தை விருத்தி செய்தல் - பொலிஸ் பயிலுநர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பிரிவு மற்றும் தகவல் தொழினுட்ப பிரிவு என்பன கிருளப்பனை ஶ்ரீ சம்புத்தத்த ஜயந்தி மாவத்தையில் அமைந்துள்ளதும் இதற்கு முன்னர் "விலாசிதா நிவச" நடாத்திச் செல்லப்பட்டதுமான கட்டடத்தில் பேணப்பட்டுவருகின்றது. இந்தக் கட்டடத்திற்கு நீண்டகாலம் திருத்த வேலைகள் செய்யாததன் காரணமாக கடமைகளை மேற்கொள்கையில் முகங்கொடுக்க நேரிடுகின்ற இடையூறுகளை தவிர்க்கும் பொருட்டு மழை மற்றும் கழிவு நீர் வௌியேற்றும் முறைமையொன்றை அமைத்தல், நீர் வழங்கல் முறைமை, வடிகாலமைப்பு மற்றும் காண் முறைமைகள், மின்சார முறைமையை மீளமைத்தல் அடங்கலாக விருத்தி செய்வதற்கும் முழுமையான திருத்த வேலைகளுக்குமாக 2020 - 2022 நடுத்தவணைகால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பிற்குள் 126.8 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினை ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |