2019-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஊழலைத் தடுப்பதற்காக தேசிய செயற்பாட்டுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல் - இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்காக சகல அரசாங்க நிறுவனங்கள் உட்பட ஏனைய நிறுவனங்கள் தொடர்பில் பொதுவாக அமுல்படுத்தும் தேசிய திட்டமொன்று இருக்கவேண்டிய தேவையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு ஊழலுக்கு எதிராக செயலாற்றுவதற்கு தேசிய செயற்பாட்டுத் திட்டமொன்றை வகுத்தமைப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உரிய சகல தரப்பினர்களினதும் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு வகுத்தமைக்கப்பட்டுள்ள இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை 2019 - 2023 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |