2019-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
லக்விஜய நிலக்கரி மின்நிலையத்தின் நிலக்கரி முனைவிடத்தில் நிலக்கரி பாவனை திறனை அதிகரித்தல் - நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்நிலையத்தின் நிலக்கரி முனைவிடத்தில் நிலக்கரி பாவனை திறன் சுமார் 742,421 மெற்றிக் தொன்களாவதோடு, இது மூன்று மாத நிலக்கரி தேவையை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு போதுமானதாகும். இந்த கொள்ளளவை ஆறு மாத காலத்திற்கான நிலக்கரி தேவையை பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் விரிவுபடுத்துவதற்காக அதன் களஞ்சிய ஆற்றலை 1.21 மில்லியன் மெற்றிக்தொன்கள் வரை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பொருட்டிலான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு சீனாவின் M/s.China Machinery Engineering Corporation நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |