• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய மின்சார செலுத்துகை மற்றும் விநியோக வலையமைப்பு அபிவிருத்தி மற்றும் வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டத்தின் கீழ் மின்சார செலுத்துகை வழிகளை நிர்மாணித்தல் / கொள்திறனை அதிகரித்தல் தொடர்பான ஒப்பந்தம்
- தேசிய மின்சார செலுத்துகை மற்றும் விநியோக வலையமைப்பு அபிவிருத்தி மற்றும் வினைத்திறன் மேம்பாடு நான்கு ஆக்கக்கூறுகளின் கீழ் நடைமுறைப்படுத்து வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மூன்றாம் ஆக்கக்கூறாக திட்டமிடப்பட்டுள்ள மின்சார செலுத்துகை வழிகளை நிர்மாணித்தல் மற்றும் கொள்திறனை அதிகரித்தல் தொடர்பான கருத்திட்டத்தின் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு யப்பான் M/s.Kinden Corporation நிறுவனமும் M/s.Kalpatharu Power Transmission நிறுவனமும் இணைந்து ஏற்படுத்திக் கொண்டுள்ள கூட்டு தொழில்முயற்சிக்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.