• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களனி, ஶ்ரீ ஜயவர்த்தனபுர, சப்பிரகமுவ மற்றும் மொறட்டுவை ஆகிய பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
- உயர் கல்வி துறையின் தரத்தினை மேலும் விருத்தி செய்யும் நோக்கில் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக, களனிய பல்கலைக்கழக மாணவர்களுக்காக நான்கு மாடி கட்டடமொன்றை நிர்மாணித்தல், ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் ஏழு மாடிகள் கொண்ட பல்பணி கட்டடமொன்றை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தின் கட்டம் I ஆக அதன் மூன்று மாடிகளை நிர்மாணித்தல், இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் கமத்தொழில் பீடம் சார்பில் கட்டடத் தொகுதியொன்றை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தின் I ஆம் கட்டத்தை நிர்மாணித்தல் மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை பீடத்தின் விரிவுரை மண்டப கட்டடத்தினதும் அதன் பொறியியல் பீட கட்டடத்தினதும் மீதமாகவுள்ள பணிகளை மேற்கொள்தல் போன்ற கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.