2019-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
களனிய கல்வி வலயத்தில் தமிழ்மொழிமூல தேசிய பாடசாலையொன்றைத் தாபித்தல் - கம்பஹா, வத்தளை பிரதேசத்தில் வசிக்கும் தமிழ்மொழிமூலம் கல்வி கற்கும் பிள்ளைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு அருண் பிரசாந் மன்றத்தினால் கல்வி அமைச்சுக்கு நன்கொடை உறுதியொன்றின் மூலம் கையளிக்கப்படவுள்ள ஆதனத்தை பயன்படுத்தி அருண் மாணிக்கவாசகம் இந்து வித்தியாலயம் என்னும் பெயரில் தமிழ் மொழிமூல இந்து தேசிய பாடசாலையொன்றை களனிய கல்வி வலயத்தில் தாபிக்கும் பொருட்டு தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|