• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1978 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்தின் 45 ஆம் பிரிவை திருத்துதல்
- 1978 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்தின் 45 ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் வலயம், மாவட்டம் அல்லது பிரிவு சார்பில் சமாதான நீதவான்களை நியமிக்கும் அதிகாரம் நீதித்துறை என்னும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கு கையளிக்கப் பட்டுள்ளது. இதற்கமைவாக இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுபவர்களின் வதிவினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, பொருத்தமானவாறு ஏதேனும் நீதிமன்ற பிரதேசத்திற்கு அல்லது மாவட்டத்திற்கு அல்லது பிரிவுக்கு சேவையாற்றக்கூடிய விதத்தில் சமாதான நீதவான்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆயினும் காலத்திற்கு காலம் நீதிமன்ற பிரதேசங்கள் மாற்றுவதன் காரணமாக சமாதான நீதவான்களுக்கு அவர்களுடைய நீதிமன்ற பிரதேசத்தை இனங்காண்பதிலுள்ள கஷ்டத்தினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, நீதிமன்ற பிரதேசத்திற்கு, மாவட்டத்திற்கு அல்லது பிரிவொன்றுக்கு சமாதான நீதவான்களை நியமிப்பதற்குப் பதிலாக நிருவாக மாவட்டம் சார்பில் சமாதான நீதவான்களை நியமிப்பதற்கு இயலுமாகும் வகையில் 1978 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்தின் 45 ஆம் பிரிவைத் திருத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, வரையப்பட்டுள்ள சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.