2019-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
விதை மற்றும் நடுகைப் பொருட்களின் தரத்தினை உறுதிப்படுத்துதல் - தரமான விதை மற்றும் நடுகைப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் 15% - 20% அறுவடையை அதிகரிக்க முடியுமென இனங்காணப்பட்டுள்ளது. ஆதலால், அதன் பொருட்டு தரம் மிக்க விதை உற்பத்தியின் போது தேவைப்படும் உபகரணங்களையும் சேவைகளையும் விவசாயிகளுக்கு வழங்குதல், தாய் தாவரங்களை பயிர்ச் செய்யும் பூங்காக்களை விருத்தி செய்து முறையாக பராமரிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல், புதிய பயிர் வகைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதி நடுகைப் பொருட்களை பிரபல்யப்படுத்துதல், சந்தையிலுள்ள விதை மற்றும் நடுகைப் பொருட்களின் தரத்தினை உறுதி செய்தல், தரம் மிக்க நடுகைப் பொருட்கள் உற்பத்தி தொடர்பில் விவசாயிகளுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் அறியச் செய்வதற்கு பல்மாதிரி ஊடக விளம்பர முறைகளைப் பயன்படுத்துதல் மற்றும் நடுகைப் பொருட்கள் உற்பத்தி கைத்தொழில் பணிகளை விரிவுபடுத்துதல் என்பன திட்டமிடப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |