2019-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க நிறுவனங்களில் திட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்தை செய்முறையொன்றாக அபிவிருத்தி பெறுபேறுகளுக்கான முகாமைத்துவ கருதுகோளை பயன்படுத்துதல் - அபிவிருத்தி அடைந்த நாடுகளும் அதேபோன்று அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளும் நவீன திட்டமிடல் மற்றும் முகாமைத்துவ செய்முறையொன்றாக அபிவிருத்தி பெறுபேறுகளின் பொருட்டு முகாமைத்துவம் என்னும் கருதுகோளை அவர்களுடைய அரசதுறை முகாமைத்துவ செயற்பாட்டிற்கு பயன் படுத்துகின்றன. இதன் மூலம் தேசிய நிலைபேறுடைய அபிவிருத்திக்கான குறியிலக்கினை பிரதான நோக்காக கொண்டு அரசாங்க முகாமைத்துவ பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அபிவிருத்தி பெறுபேறுகளின் சார்பில் முகாமைத்துவ செய்முறையினை 05 அமைச்சுக்களிலும் 02 மாகாண சபைகளிலும் முன்னோடி கருத்திட்டமொன்றாக நிறுவனமயப்படுத்துவதற்கும் இதன் வெற்றியின் மீது அரசாங்க நிறுவனங்கள் சகலவற்றையும் தழுவும் விதத்தில் இந்த கருதுகோளை பயன்படுத்துவதற்குமாக பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |