2019-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள் குடியமர்த்தல் பணிகளை துரிதமாக நடைமுறைப்படுத்தல் - மோதல் காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள் குடியமர்த்தல் பணிகளை நிரந்தர குடியிருப்புகள், துப்பரவேற்பாட்டு வசதிகள், நீர் வழங்கல், பாதைகள், மின்சார இணைப்புகள் போன்ற பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி உட்பட சுகாதார வசதிகளை தாபித்து துரிதமாக நடைமுறைப்படுத்ததுவதற்கு அரசாங்கத்தின் கவனம் செலுத்தப் பட்டுள்ளது. இதற்கிணங்க, வீட்டின் உரிமையாளர்களினால் நிர்மாணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவேண்டிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 4,750 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கும், இந்த பிரதேசத்திற்குத் தேவையான பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்கும் பனை சார்ந்த கைத்தொழிலை மேம்படுத்துவதற்காக திக்கம் வடிசாலை நிறுவனத்தை விருத்தி செய்வதற்குமாக பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |