• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலுள்ள மாதிரி கிராமங்களுக்கும் எழுச்சி கிராமங்களுக்கும் குடிநீர் வழங்குதல்
- காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலுள்ள மாதிரி கிராமங்களுக்கும் எழுச்சி கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கும் பொருட்டு இந்த வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் ஒதுக்கப்படும் நிதி ஏற்பாடுகளை பயன்படுத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் கீழ் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் லுனுகம்வெஹெர மற்றும் திஸ்ஸமஹாராம பிரதேச செயலக பிரிவுகளில் தாபிக்கப்பட்டுள்ள 18 மாதிரி கிராமங்களில் 703 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் 298 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீ்ட்டில் கிரிந்தி ஓயா நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினாலும் வீடமைப்பு, நிருமாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.