2019-01-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
களுகங்கை வௌ்ளப்பெருக்கு தடுப்பு, உப்பு நீர் கலத்தலை தடுத்தல் மற்றும் களுகங்கை நீர் மூலம் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு குடிநீர் வழங்குதல் என்பவற்றின் பொருட்டான களுகங்கை அபிவிருத்திக் கருத்திட்டம் - மழைக்காலத்தில் களுகங்கை பெருக்கெடுத்து ஓடுவதனால் இத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் வௌ்ளப்பெருக்கு காரணமாக ஏற்படும் சேதங்களை தடுத்தல், களுகங்கை ஆற்றுப்படுகையிலிருந்து சுமார் 18 கிலோ மீற்றர் தூரம் கங்கை பகுதிக்குள் உப்பு நீர் வருவதன் காரணமாக குடிநீர் விநியோகத்தில் உப்பு நீர் கலப்பதை தடுத்தல் மற்றும் களுகங்கையின் துணை கங்கையொன்றான குடா ஓயாவை திசை திருப்புவதன் மூலம் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு குடிநீர் வழங்குதல் என்பவற்றை பிரதான நோக்காக கொண்டு சுமார் 123 பில்லியன் ரூபா முதலீட்டுடனான களுகங்கை சார்ந்த அபிவிருத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியத்தகவாய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்திற்கு வௌிநாட்டு நிதியினை முதலீடு செய்து கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய சருவதேச நிர்மாணிப்பு கம்பனிகளிலிருந்து ஆர்வத்தை வௌிப்படுத்தல்களைக் கோருவதற்கும் பொருத்தமான நிர்மாணிப்பு கம்பனிகளிடமிருந்து கருத்திட்ட பிரேரிப்புகளை கோருவதற்கும் அவற்றை மதிப்பிடும் பொருட்டு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்படும் குழுக்களை தாபிப்பதற்குமாக கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |