2019-01-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஏற்றுமதியாளர்களை பதிவுசெய்வதற்கான வழிமுறையினை இலகுபடுத்தல் - ஏற்றுமதியாளர்களை பதிவுசெய்வதற்காக 1985 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் வழிமுறையின் கீழ் தேவையான பதிவினை பெற்றுக் கொள்வதற்கு நீண்ட செயற்பாட்டினை பின்பற்ற வேண்டியுள்ளமை யினாலும் பல்வேறுபட்ட 06 நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டியுள்ளமையினாலும் குறித்த பதிவு சார்பில் ஒரு வாரத்திலிருந்து மூன்று வாரங்கள் வரையிலான காலம் செல்லுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏற்றுமதி நோக்கங்களுக்கான அனுமதி அல்லது உரிமப்பத்திரம் தேவைப்படும் வர்த்தக நிறுவனங்களுக்கு மேற்குறிப்பிட்ட காலப்பகுதிக்கு மேலதிகமாக மேலும் இரண்டு வாரங்களிலிருந்து நான்கு வாரங்கள் வரையிலான காலம் செல்லுகின்றமை ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த பதிவு வழிமுறையினை இலகுவாக மேற்கொள்ளும் பொருட்டு ஏற்கனவே ஏற்றுமதியாளர்கள் தொடர்புபட்ட தரவுகளுடனான தகவல் முறைமையை பேணும் இலங்கை சுங்கம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ஏற்றுமதியாளரகள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ளும் வழிமுறையினை தயாரிப்பதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தற்போது இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் பேணப்பட்டுவரும் பதிவு செய்யும் வழிமுறையினை இரத்து செய்யும் பொருட்டு திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |