2019-01-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2018/2019 பெரும்போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் நிகழ்ச்சித்திட்டம் - 2018/2019 பெரும்போகத்துக்கான அறுவடை ஆரம்பிக்கவுள்ளதோடு, நெல்லுக்கான நிலையான விலையினை பேணுவதற்கும் விவசாயிகளின் நெல்லுக்கு சாதாரண விலையினை வழங்கும் பொருட்டும் இந்த போகத்திலும் நெல் கொள்வனவு செய்யும் நிகழ்ச்சித்திட்டமானது 18 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சம்பா வகை நெல் கிலோ கிராம் ஒன்றுக்கு 41/- ரூபாவும் நாடு வகை நெல் கிலோ கிராம் ஒன்றுக்கு 38/- ரூபாவும் என்னும் உத்தரவாத விலையின் கீழ் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதற்கமைவாக இத்தடவை பெரும்போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபைக்குத் தேவையான நிதியினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |