• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அஹங்கம பொலிஸ் நிலையம் நடாத்திச் செல்லப்படும் மூன்று மாடிக் கட்டடத்தின் திருத்த வேலைகள்
- 35 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் பொது மக்களுக்கு சேவை வழங்கும் அஹங்கம பொலிஸ் நிலையமானது தற்போது நடாத்திச் செல்லப்படும் மூன்று மாடிக் கட்டடம் சேதமடைந்தும் நீண்ட காலம் திருத்த வேலைகள் செய்யாததன் காரணமாகவும் சேவைகளை வழங்குவதில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. இதற்கிணங்க, இந்தக் கட்டடத்திற்கு செய்யப்படவேண்டிய திருத்த வேலைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் சார்பில் 33.4 மில்லியன் ரூபாவை ஒதுக்கிக்கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.