2019-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
திரிபீடகத்தை உலக மரபுரிமையொன்றாக பிரகடனப்படுத்தல் - புத்த பெருமானின் போதனைகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்ட புனித திரிபீடகத்தை இலங்கையின் தேசிய மரபுரிமையாக பெயர் குறிப்பிடுவதற்கும் அதனை அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்துவதற்கும் புனித திரிபீடகம் சம்பந்தமாக மீள் பதிப்பித்தல் மற்றும் ஏனைய பணிகள் புத்தசாசன அமைச்சின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்வதற்கும் அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைவாக 2019 சனவரி மாதம் 05 ஆம் திகதி மாத்தளை அலுவிஹாரையில் திரிபீடகமானது தேசிய மரபுரிமையாக பிரகடனபடுத்தப்பட்டது. இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்த வேண்டுமென்னும் புனித திரிபீடகமானது உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்குத் தேவையான பணிகளை செய்யவேண்டுமென்னும் பிரேரனணையொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|