• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஶ்ரீ ஜயவர்தனபுர தாதியர் பீடத்தை நிருமாணிப்பதற்கான நிலக்காலிடல் பணிகள்
- 22 மாடிகளைக் கொண்ட ஶ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள தாதியர் பீடத்தை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு கையளிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் முன்னர் வழங்கப்பட்டிருந்தது. 248 இடங்களுக்கான நிலக்காலிடல் வேலையை நடைமுறைப்படுத்த வேண்டியிருப்பதால், 03 பொதிகளின் கீழ் உப ஒப்பந்தங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு மேற்போந்த கருத்திட்டத்தின் பொதி 01 மற்றும் பொதி 02 என்பவற்றை முறையே 124.8 மில்லியன் ரூபா மற்றும் 137.5 மில்லியன் ரூபா கொண்ட தொகைக்கு M/s Nawaloka Piling (Pvt) Ltd. நிறுவனத்துக்கும் கூறப்பட்ட கருத்திட்டத்தின் பொதி 03 ஐ 126 மில்லியன் ரூபா கொண்ட தொகைக்கு M/s D.P.Jayasinghe Piling Co. (Pvt) Ltd. நிறுவனத்துக்கும் கையளிக்கும் பொருட்டு வீடமைப்பு, நிருமாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.