2019-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
யாழ்ப்பாண நகரத்திலுள்ள பத்து (10) நகர பூங்காக்கள் மற்றும் சுற்றுப் புறத்திலுள்ள பூங்காக்கள் என்பவற்றின் அபிவிருத்தி செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துதல் - யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பண்ணை நகர சந்தை இடம், நீரேரி முகப்பு பூங்கா, சங்கிலியன் பூங்கா, ஓட்டுமடம் நீரேரி பூங்கா, கோட்டையினைச் சூழவுள்ள பூங்கா, இராசாவின் தோட்டச் சதுக்கம், ரசல் சதுக்கம், பாசையூர் நீரோடைப் பூங்கா அத்துடன் குருநகர் கடற்கரை வீதி சதுக்கம் என்னும் பெயர் கொண்ட பூங்காக்களானவை அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டின் பொருட்டு இனங்காணப்பட்டுள்ளன. அதற்கிணங்க, பொருத்தமான நகர அபிவிருத்தி தலையீடுகளுக்கான கொள்கை மற்றும் விரிவான திட்டமிடல், கேள்வி ஆவணங்களைத் தயாரித்தல் உட்பட நிருமாணிப்பு மேற்பார்வைக்கான மதியுரை ஒப்பந்தத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |