2019-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
முப்படைகளுக்கும் இலங்கை பொலிசிற்கும் விசேட அதிரடிப்படைக்கும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கும் தேசிய பயிலிளவல் படையணிக்கும் சீருடைகளையும் ஏனைய புடைவைத் துணிகளையும் வழங்குதல் - முப்படைகளுக்கும், இலங்கை பொலிசிற்கும், விசேட அதிரடிப்படைக்கும், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கும், தேசிய பயிலிளவல் படையணிக்கும் தேவையான சீருடை மற்றும் ஏனைய புடைவைத் துணிகளை உள்நாட்டு புடைவை உற்பத்தியாளர்களிடமிருந்து 1,596.4 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |