2019-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
யாழ்ப்பாணம் நகர மண்டபத்தை அபிவிருத்தி செய்தல் - சேதமடைந்துள்ளதமையினால் பயன்படுத்தப்படாதுள்ள யாழ்ப்பாணம் நகர மண்டபத்திற்கு பதிலாக தற்போது இந்த நகரசபையின் பணிகள் நல்லூர் கோவிலுக்கு சொந்தமான காணியிலுள்ள கட்டடமொன்றில் நடாத்தப்பட்டு வருகின்றன. பொது மக்களுக்கு அன்றாட சேவைகளை வழங்கும் நகரசபைக்குரிய பிரிவுகள் பல்வேறு இடங்களில் உள்ளமையினால் பொது மக்கள் இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. ஆதலால் யாழ்ப்பாணம் நகர மண்டபத்தை 2,350 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவில் 2019 - 2023 காலப்பகுதிக்குள் நிருமாணிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|