• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹல்தும்முல்ல மூலிகை பூங்காவை அவிருத்தி செய்தல்
- பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஹல்தும்முல்ல மூலிகை பூங்கா 65 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துள்ளதோடு, இங்கு அழிந்துபோகும் ஆபத்துக்கு உட்பட்டுள்ள செடிகள், பிரதேசத்திற்கே உரிய செடிகள் மற்றும் அரிய வகை செடிகள் அடங்கலாக 700 வகை செடிகள் உள்ளன. இதன் ஊடாக மூலிகை பூங்காக்களை தாபிப்பதற்குத் தேதவையான மூலிகை கன்றுகள் மற்றும் தொழிநுட்ப ஆலோசனைகளை வழங்குதல், மூலிகைச் செடிகள் பற்றிய வௌியீடுகளை விற்பனை செய்தல் மற்றும் அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பணிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு 33.4 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டில் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.