• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் துரித பொருளாதார, சமூக வலுவூட்டல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் கருத்திட்டங்கள்
- முப்பது வருடங்களுக்கு மேலாக அபிவிருத்தி இடைவௌி காணப்பட்டதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகள், சமூக உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல், வாழ்வாதார உதவிகளை ஏற்பாடு செய்தல் என்பவற்றின் மூலம் இந்த பிரதேசங்களின் அபிவிருத்தியினை துரிதப்படுத்தும் பொருட்டு விசேட கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க கமத்தொழில், தொழிநுட்பம், கடற்றொழில் உட்பட சேவைத்துறை ஆகியவற்றின்பால் விசேட கவனம் செலுத்தி இதன் கீழான நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். கிராமிய பாதைகள், தீவுகளில் படகு நங்கூரமிட்டும் இடங்கள், பொருட்களை ஏற்றி இறக்கும் இடங்கள், இறங்குதுறைகள், தீவு மற்றும் பிரதான நிலப்பரப்புக்குமிடையில் புகு வழிகளை நிர்மாணித்தல், கமத்தொழில் உபகரணங்கள், விவசாய கிணறுகள், மீன்பிடி படகுகள் மற்றும் இயந்திரங்கள், சுயத்தொழில் சார்ந்த உபகரணங்கள் மற்றும் தொழிநுட்பம், சந்தை வசதி, களஞ்சியம் உட்பட அது சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற வாழ்வாதரம் தொடர்புபட்ட வசதிகள் இந்த கருத்திட்டத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
இதற்கமைவாக, பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகள், சமூக உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதார மற்றும் சுயத்தொழில் மற்றும் சிறு கைத்தொழிலும் தொழிமுயற்சிகளும் என்னும் நான்கு துறைகளின் ஊடாக இந்தக் கருத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு 2,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.