• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2019 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அரசாங்கத்தின் அரசிறை திரட்டு நிகழ்ச்சித் திட்டத்தை வலுப்படுத்தும் நோக்குடனும் 2021 ஆம் ஆண்டளவில் அடைந்து கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ள நடுத்தவணைக்கால அரசாங்கத்தின் அரசிறை இலக்குகளை அடைந்து கொள்வதற்கு இயலுமாகும் வகையிலும், 2019 ஆம் ஆண்டிற்கான வருடாந்த வரவுசெலவுத்திட்ட தயாரிப்புக்காக கடந்தவாரம் நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆதலால், 2019 ஆம் நிதியாண்டின் முதல் 04 மாத காலப்பகுதியில் கணக்குகள் மீதான வாக்கின் கீழ் உறப்படுவதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள அரசாங்க செலவினத்தையும் உள்ளடக்கிய புதிய ஒதுக்கீட்டுச் சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் மீள சமர்ப்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வாறு வரையப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு இணங்க மீண்டுவருஞ் செலவினம் கருதி 1,436 பில்லியன் ரூபாவையும் மூலதனச் செலவினம் கருதி 876 பில்லியன் ரூபாவையும் உள்ளடக்கிய 2,312 பில்லியன் ரூபா தொகையை பொதுச் செலவினங்களுக்காக உறப்படவுள்ள செலவினம் காட்டுகின்றது. மேலும், பொதுப்படுகடன் சேவை மற்றும் விதவைகள் அநாதைகளுக்கான ஓய்வூதியம் போன்ற திரட்டு நிதியம் மீது சாட்டுதல் செய்யப்படுவதற்கு ஏற்கனவே அதிகாரமளிக்கப்பட்டுள்ள செலவினங்கள் கருதி 2,232 பில்லியன் ரூபா குறித்தொதுக்கப்பட்டுள்ளது. இதனை ஒத்ததாக அரசாங்க முற்பணக் கணக்கிற்காக 06 பில்லியன் ரூபாவைக் கொண்ட ஏற்பாடொன்றை உள்ளடக்கி, 2019 ஆம் ஆண்டிற்காக உறப்படுவதற்கு எதிர்பார்க்கப்படும் மொத்தச் செலவினம் 4,550 பில்லியன் ரூபாவாகும். நடைமுறையிலுள்ள வரிவீத கட்டமைப்பிற்கு இணங்க, 2019 ஆம் ஆண்டிற்கான அரசாங்க வருமானமும் வௌிநாட்டு கொடைகளும் கிட்டதட்ட 2,390 பில்லியன் ரூபாவாகவிருக்கும். மேலும், வௌிநாட்டு மற்றும் உள்நாட்டு மூலங்கள் இரண்டிலிருந்தும் கிடைக்கும் மொத்த கடன் பெறல் தேவைப்பாடானது 2,160 பில்லியன் ரூபாவாகவிருக்கும். அதற்கிணங்க, 2019 ஆம் ஆண்டிற்கான வரைவு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.