• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொலன்னாவ கால்வாய் திசைதிருப்புகை திட்டம் - கட்டம் - IV
- கொழும்பு தலைநகரம் சார்ந்த நகர அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கொலன்னாவ கால்வாய் திசைதிருப்புகை திட்டமானது IV கட்டங்களின் கீழ் கித்தம்பகுவ கால்வாயின் இறுதிக் கட்டத்தின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதோடு, இதன் ஊடாக கால்வாயின் நீர் வழிந்தோடுதலுக்கு தடையாகவுள்ள குறுகிய இடங்களில் இந்த தடைகளை அப்புறப்படுத்துதல், 'கேபியன்' சுவர்களை நிருமாணித்தல், 'சீட் வைல்' பயன்படுத்தி கால்வாய் அணையினை பலப்படுத்துதல், பக்கக் கான்களுடன் பராமரிப்புக்கான பாதைகளை நிருமாணித்தல், கால்வாயின் கீழேயுள்ள சேறு அப்புறப்படுத்தல், பாலங்களை மீள நிருமாணித்தல், நீர் வௌியேற்றும் கதவு கட்டமைப்புகளை நிருமாணித்தல் உட்பட அவற்றுக்கான இயந்திர பணிகளை மேற்கொள்தல் என்பன திட்டமிடப்பட்டுள்ளன. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கொலன்னாவ கால்வாய் திசைதிருப்புகை திட்டத்தின் IV ஆம் கட்டம் தொடர்புபட்ட கருத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தை 1,431.68 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு E&C-RR கூட்டு தொழில்முயற்சிக்கு கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.