2019-01-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொலன்னாவ கால்வாய் திசைதிருப்புகை திட்டம் - கட்டம் - I - கொழும்பு நகரத்தில் வௌ்ளப்பெருக்கினை கட்டுப்படுத்துவதற்காக 4.8 கிலோ மீற்றர் நீளமான கொலன்னாவ கால்வாய் திசைதிருப்புகை திட்டமானது கட்டம் I, II, III மற்றும் IV என்னும் 4 உப பிரிவுகளின் கீழ் செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றுள் IIஆம் III ஆம் கட்டங்களின் கீழான ஒப்பந்தங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கருத்திட்டத்தின் கட்டம் I இன் கீழ் கித்தம்பகுவ கால்வாயின் ஆரம்பப் பகுதி புனரமைக்கப்படவுள்ளதோடு, இதன் ஊடாக கால்வாயினை தோண்டுதல், கால்வாயின் நீர் வழிந்தோடுதலுக்கு தடையாகவுள்ள குறுகிய இடங்களில் இந்த தடைகளை அப்புறப்படுத்துதல், கால்வாயின் இரு பக்கங்களிலும் சுவர்களை கட்டி கால்வாய் அணையினை பலப்படுத்துதல், பக்கக் கான்களுடன் பராமரிப்புக்கான பாதைகளை நிருமாணித்தல், உருக்கு கதவுகளுடனான நீர் வௌியேற்றும் கதவு கட்டமைப்புகளை நிருமாணித்தல் என்பன திட்டமிடப்பட்டுள்ளன. இது தொடர்பிலான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 859.5 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு E&C-RR கூட்டு தொழில்முயற்சிக்கு கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|