2019-01-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மாத்தளை மாவட்ட செயலகத்தின் உத்தேச ஐந்து மாடி கட்டடத்திற்கான மீதி வேலைகளை பூர்த்தி செய்தல் - மாத்தளை மாவட்ட செயலகத்திற்கு புதிய ஐந்து மாடி கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, அதன் ஆரம்ப நிருமாணிப்பு பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. இந்தக் கட்டடத்தை பயன்படுத்துவதற்காக மேலும் செய்யப்படவேண்டிய மின்சாரம், தொடர்பாடல், தீ பாதுகாப்பு, அறைகளை வேறாக்கல் உட்பட விருத்தி செய்யும் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் ஆரம்ப ஒப்பந்த கம்பனியான M/s Micro Constructions (Pvt) Ltd. நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு உள்ளக அலுவல்கள், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|