2019-01-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
குடியியல் கல்வி என்னும் பாடத்தின் கீழ் துணைக் கூறொன்றாக சட்டப் பாடத்தை உள்ளடக்குதல் - சட்டத்தை மதிக்கும் ஒழுக்கம் நிறைந்த எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்கு அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சட்டம் தொடர்பிலான அறிவினை பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, தரம் 6 இலிருந்து கல்வி பொது தராதர (சாதாரண தரம்) வரையுள்ள பாடத்திட்டத்தில் குடியியல் கல்வி பாடத்தில் சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான சட்டம், அடிப்படை மனித உரிமைகள் சட்டம், வீதி ஒழுங்குவிதி, சுற்றாடல் மற்றும் பொதுச் சொத்துக்கள் பற்றிய சட்டம், அடிப்படை தண்டனைச் சட்டம், மனிதவியாபாரம் தொடர்பிலான சட்டம், பராயமடையாதோர் தொடர்பிலான பாலியல் குற்றம் பற்றிய சட்டம், தாவர மற்றும் வனசீவராசிகள் பாதுகாப்பிற்குரிய சட்டம் போன்ற குடிமக்கள் அடிப்படையாக அறிந்துகொள்ளவேண்டிய சட்ட விடங்களை உள்ளடக்குவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஆராய்ந்து அறிக்கையிடும் பொருட்டு கல்வி, நீதி, மற்றும் சட்டம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிபுணர்களினதும் உரிய நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |