• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொல்தூவ துணை வீதியினை சுகுருபாயவிலிருந்து கனத்த வீதி வரை நீடித்தல்
- கொழும்பு நகரத்தினுள் அமைந்துள்ள அரசாங்கத்தின் நிருவாக மற்றும் அலுவலக கட்டடங்கள் அனைத்தையும் ஶ்ரீ ஜயவர்த்தபுர கோட்டை நிருவாக நகரத்திற்கு கொண்டு செல்லும் பணிகளுக்கு ஒருங்கிணைவாக இந்தப் பிரதேசத்தில் அபிவிருத்தி பணிகள் செய்யவேண்டியுள்ளன. இதன் பொருட்டு வசதிகளைச் செய்வதற்காக தெமட்டகொடையிலிருந்து சுற்றுவட்ட வீதியை இணைக்கும் வீதியொன்றை நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே இதன் ஒரு பகுதியானது பொல்தூவ சந்தியிலிருந்து கொஸ்வத்த வரை நிருமாணிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தக் கருத்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் பொல்தூவ சந்தியிலிருந்து சுகுருபாய வரையிலான அபிவிருத்தி பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, இரண்டாம் கட்டத்தின் கீழ் சுகுருபாயவிலிருந்து கனத்த வீதி வரையான பகுதியின் அபிவிருத்திப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அபிவிருத்தி பணிகளை பூர்த்தி செய்வதற்குத் தேவையான 328.63 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.