• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2019 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தினைத் தயாரித்தல்
- 2019 ஆம் ஆண்டிற்கான ஓதுக்கீட்டு சட்டமூலம் 2018 ஒக்ரோபர் மாதம் 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் முடிவுறுத்தப்பட்டமையினால் குறித்த இந்த சட்டமூலத்திற்கு பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இயலாமற்போனது. சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக புதிய ஒதுக்கீட்டு சட்டமூலமொன்று மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்படும் வரை 2019 ஆம் ஆண்டிற்கான முதல் நான்கு மாதங்கள் சார்பில் அரசாங்க செலவுகளை தழுவும் பொருட்டு இடைக்கால கணக்கொன்று 2018 திசெம்பர் மாதம் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, அன்றையதினமே அது பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கமைவாக இடைக்கால கணக்கின் மூலம் தழுவப்படும் 2019 ஆம் ஆண்டிற்கான முதல் நான்கு மாதங்களுக்கான செலவுகளையும் உள்ளடக்கி 2019 ஆம் ஆண்டிற்கான ஓதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றக் கொள்ளப்படல் வேண்டும்.
இதற்கிணங்க, 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய வரவுசெலவுத்திட்டமானது தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் நிதி வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தை பலப்படுத்தும் நோக்கிலும் 2021 ஆம் ஆண்டளவில் அடைவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள பின்வரும் நடுத்தவணைக்கால அரசிறைக் குறியிலக்குகளை வெற்றிக் கொள்வதற்கும் இயலுமாகும் வகையில் தயாரிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
(i) அரசிறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 17 சதவீதத்தைவிட அதிகரித்தல்.
(ii) அரசாங்கத்தின் மீண்டுவரும் செலவினத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 15 சதவீதத்திற்கு வரையறுத்தல்.
(iii) அரசாங்கத்தின் முதலீடுகளை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5.5 சதவீதத்தில் பேணுதல்.
(iv) வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3.5 சதவீதத்திற்கு வரையறுத்தல்.
(v) தீர்வு செய்யப்படாத அரசாங்க கடன்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 70 சதவீதத்தைவிட குறைவாக பேணுதல்.