• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொடர்ச்சியாக 'கம்பெரலிய' துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- 'கம்பெரலிய' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கிராமிய குளங்களை புனரமைத்தல், கிராமிய வீதிகளை நவீனமயப்படுத்தல், பாடசாலைகளில் துப்பரவேற்பாட்டு வசதிகளை ஏற்பாடு செய்தல், பாடசாலை விளையாட்டு மைதானங்கள், வாராந்த சந்தை, பசுமை பூங்கா போன்றவற்றை நிருமாணித்தல், மின்சாரம் வழங்குதல், மதவழிபாட்டுத் தலங்களை புனரமைத்தல், வீடுகளை அபிவிருத்தி செய்தல் உட்பட காணி உறுதிகளை வழங்குதல் போன்ற கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 2018 ஆம் ஆண்டு சார்பில் 20 பில்லியன் ரூபாவைக் கொண்ட நிதியேற்பாடானது அமைச்சரவையினால் குறித்தொதுக்கப்பட்டது. தேர்தல் தொகுதியொன்றுக்கு 300 மில்லியன் ரூபாவை வழங்கி இந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் நடாத்திச் செல்வதற்காக 2019 ஆம் ஆண்டு சார்பில் 48 பில்லியன் ரூபாவைக் கொண்ட நிதியேற்பாடொன்றை குறித்தொதுக்கிக்கொள்ளும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.