• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரண்டாம் நிலை கல்வி​யை மேம்படுத்துவதற்காக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப கேந்திர நிலையமொன்றைத் தாபித்தல்
- இரண்டாம் நிலை கல்வியில் கணனி ஊடாக கற்பித்தல் முறையினை பலப்படுத்தும் நோக்கில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப கற்பித்தல் மற்றும் அது தொடர்பிலான கற்பித்தல் சூழலை விருத்தி செய்தல், ஆசியர்களின் தகவல் தொழினுட்ப கல்வி ஆற்றலை விருத்தி செய்தல் மற்றும் கிராமிய பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களையும் உள்வாங்கி சகல மாணவர்களுக்கும் கல்வி சார்பில் சமமான வாய்ப்பினை வழங்குவதற்கான கருத்திட்டமொன்றை கல்வி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் கீழ் சகல வசதிகளுடனும் கூடிய தேசிய e-கற்றல் வளங்கள் அபிவிருத்தி நிலையமொன்றை வடமேல் மாகாணத்தில் தாபிப்பதற்கும் மேலும் இரண்டு கல்வி தகவல், தொடர்பாடல் தொழினுட்ப நிலையங்களை தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி தாபிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்திற்கு நிதியளிப்பதற்கு தென்கொரியாவின் ஏற்றுமதி, இறக்குமதி வங்கியின் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிலையமானது உடன்பாடு தெரிவித்துள்ளதோடு, இந்த நிதியத்தை பெற்றுக் கொள்வதற்குத் தேவையான உடன்படிக்கையினை செய்துகொள்ளும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.