• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-11-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இடைக்கால கணக்கு - 2019
- 2019 ஆம் ஆண்டின் ஆரம்ப 04 மாதங்களுக்கான நிதியேற்பாடுகளை ஏற்பாடு செய்யதுகொள்ளும் பொருட்டு இடைக்கால கணக்கொன்றை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க 2019 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் அங்கீகரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படும் வரை 2019 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அரசாங்க சேவைகளை தொடர்ச்சியாக நடாத்திச் செல்வதற்குத் தேவையான 760 பில்லியன் ரூபாவும் ஏற்கனவே பல்வேறுப்பட்ட சட்டங்களின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள செலவுகளை ஏற்பதற்காக 970 பில்லியன் ரூபாவும் அரசாங்க முற்பண கணக்கு நோக்கங்களுக்காக 05 பில்லியன் ரூபாவும் என்னும் விதத்தில் 1,735 பில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த செலவினை ஏற்பதற்கான பிரேரணையொன்றை (இடைக்கால கணக்கு) பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.