• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமூக ஒருமைப்பாட்டிற்கான கல்வி கருத்திட்டத்தை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துதல்
- சமூக ஒருமைப்பாட்டிற்கான கல்வி கருத்திட்டத்தை 2005 ஆம் ஆண்டிலிருந்து ஜேர்மன் அரசாங்கத்தின் தொழிநுட்ப உதவியின் கீழ் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்ட மொன்றாகும். பல்மொழி பேசும் சமூகத்தில் நல்லிணக்கத்துடன் சமாதானமாக வாழ்வதற்காக பிள்ளைகள், இளைஞர்கள், அவர்களுடைய குடும்பங்கள் அதேபோன்று சமூகத்திற்கும் இடமளிக்கும் நோக்கில் இந்தக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்த கருத்திட்டத்திற்கு 15.8 மில்லியன் யூரோக்கள் கொண்ட கொடையினை ஜேர்மன் அரசாங்கம் வழங்கியுள்ளதோடு, இதனை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மேலும் 250,000 யூரோக்களை வழங்குவதற்கு ஜேர்மன் கூட்டாட்சி குடியரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, இந்தக் கொடையினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு பரிமாற்று பத்திரங்களை கைச்சாத்திடும் பொருட்டு நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.