2018-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பால் பண்ணைகளின் வினைத்திறனை மேம்படுத்துதல் - இலங்கையில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஐரோப்பிய இன மற்றும் கலப்பு இன சுமார் 5,000 கறவைப் பசுக்கள் அவுஸ்திரேலியாவிலிருந்தும் நியூசிலாந்திலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு நாடு முழுவதிலும் உள்ள பால் பண்ணைகளுக்கு பகிந்தளிக்கப்பட்டுள்ளன. இந்த கறவைப் பசு ஒன்றிலிருந்து நாளொன்றுக்கு 20-25 லீற்றர் பால் பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தாலும் குறைபாடுடைய முகாமைத்துவம் மற்றும் சுற்றாடல் தாக்கங்கள் போன்ற பல்வேறுபட்ட காரணங்களினால் பால் உற்பத்தியானது சுமார் 10-15 லீற்றர்களாக மிகக் குறைந்தளவு உற்பத்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதலால், இந்த பண்ணைகளில் வினைத்திறனையும் உற்பத்தி திறனையும் விருத்தி செய்வதற்காக திட்டமிடப்பட்டுள்ள கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்து வதற்கும் இதற்குத் தேவையான திறமுறைகளை ஆராய்ந்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக விலங்கு உற்பத்தி, சுகாதாரத் திணைக்களத்தினதும் தேசிய கால்நடைவளர்ப்பு அபிவிருத்தி சபையினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்குமாக கடற்றொழில், நீரகவளமூல அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |