2018-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உள்நாட்டு சோள உற்பத்தியை அதிகரிப்பதற்கான வசதிகளை செய்தல் - காலநிலை உட்பட பல்வேறுபட்ட காரணங்களினால் உள்நாட்டு சோள உற்பத்தியானது உள்நாட்டு சந்தை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லாததன் காரணமாக கடந்த காலம் முழுவதும் சோளம் இறக்குமதி செய்யப்பட்டது. உள்நாட்டு சோள உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதியை குறைப்பதன் மூலம் வௌிநாடுகளுக்கு செல்லும் அந்நிய செலாவணியை குறைத்துக் கொள்வதற்கும் அதேபோன்று உள்நாட்டு சோள செய்கையாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கும். இதற்கமைவாக, தற்போது சலுகை வட்டி வீதத்தின் கீழ் நடைமுறையிலுள்ள கடன் திட்டங்களின் மூலம் உள்நாட்டு சோள உற்பத்தியை அதிகரிப்பதற்குத் தேவையான கடன் வசதிகளை செய்யும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |