2018-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சீ செல்ஸ் குடியரசின் கரையோர பாதுகாப்புக்காக ரோந்து படகுகள் இரண்டினை நிருமாணித்தல் - அதிமேதகைய சனாதிபதி அவர்களின் சீ செல்ஸ் குடியரசுக்கான அவருடைய இராஜதந்திர விஜயத்தின் போது சீ செல்ஸ் குடியரசின் கரையோர பாதுகாப்புக்காக இரண்டு ரோந்து படகுகளை நிருமாணித்து தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டது. இதற்கமைவாக, இரு நாடுகளினதும் இராஜதந்திர உறுவுகளை பலப்படுத்தும் நோக்கில் கரையோர பாதுகாப்பு ரோந்து படகுகள் இரண்டினை நிருமாணிக்கும் பணிகளை இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |