• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு உருளைக் கிழங்கு விவசாயிகளை வலுவூட்டுதல்
- வெலிமடை மற்றும் அதற்கண்மித்த பிரதேசங்களில் கூடுதலான உருளைக்கிழங்கு அறுவடை கிடைப்பதன் காரணமாக சந்தையில் உள்நாட்டு உருளைக் கிழங்கு விநியோகம் அதிகரித்து காணப்படுவதனால் குறித்த இந்த விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதனை உறுதி செய்வதற்கு உருளைக்கிழங்கு அறுவடையினை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இதற்கமைவாக, வரையறுக்கப்பட்ட இலங்கை நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கையிருப்பிற்கு விவசாயிகளுக்கு செலுத்தப்பட வேண்டிய நிதி ஏற்பாடுகளை குறித்தொதுக்கிக் கொள்ளும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.