2018-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பெறுகை மீளாய்வு மற்றும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளல் - அரசாங்கத்தின் பல்வேறுபட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பெறுகைகள் சார்பில் அரசாங்கத்தினால் செலவிடப்படும் பணம் சார்பில் உரிய பெறுமதி கிடைப்பதனை உறுதி செய்து கொள்வதற்கும் இந்த பணிகள் அரசாங்க கொள்வனவு வழிகாட்டல்களுக்கு அமைவாக செய்யப்பட்டுள்ளனவா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக அரசாங்க நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் சகல கொள்வனவுகள் சம்பந்தமாகவும் செய்யப்படும் மீளாய்வு மற்றும் விரிவான ஆய்வுகளை செய்வதற்காக பிரேரிக்கப்பட்ட கருத்திட்டங்களை ஏனைய அமைச்சுக்களின் நிகழ்ச்சித்திட்டங்களுடன் இரட்டிப்பாகாத விதத்தில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |