2018-11-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மாகாண சபை தேர்தலை நடாத்துதல் - ஒன்பது மாகாண சபைகளுள் 06 மாகாண சபைகளின் உத்தியோபூர்வ காலம் ஏற்கனவே முடிவடைந்துள்ளமையினால் துரிதமாக மாகாணசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்யவேண்டியுள்ளது. மாகாண சபை உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக நடைமுறையிலுள்ள 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் (திருத்த) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தலை நடாத்துவதற்கு அத்தியாவசியமான தேர்தல் தொகுதிகளின் நிர்ணய பணிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை. இதற்கிணங்க, எதிர்வரும் மாகாணசபை தேர்தலை துரிதமாக நடாத்தும் தேவையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இம்முறை நடாத்தப்படவுள்ள மாகாணசபைத் தேர்தலை முன்பு நடைமுறையிலிருந்த விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் 25சதவீதம் கட்டாய பெண்களின் அபேட்சக தன்மையை உறுதிபடுத்தும் விதத்தில் நடாத்துவதற்குத் தேவையான சட்டத்தினை வரையும் பொருட்டு மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |