• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-11-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2018 சிறுபோகத்தில் தத்துப்பூச்சி மற்றும் தண்டு துளைப்பான் என்பவற்றினால் சேதமடைந்த வயல்களுக்கு விதைநெல் நிவாரணத்தை வழங்குதல்
- பொலன்நறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 2018 சிறுபோகத்தில் நெல் செய்கை சார்ந்து தத்துப்பூச்சி மற்றும் தண்டு துளைப்பான் என்பவற்றினால் செய்யப்பட்ட சேதமானது மிகத் துரிதமாக பரவியமையினால் நெற்செய்கைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிணங்க பொலன்நறுவை மாவட்டத்தில் 18,280 விவசாயிகளும் 34,759 ஏக்கர் வயல்களும் அம்பாறை மாவட்டத்தில் 3,676 விவசாயிகளும் 7,402 ஏக்கர் வயல்களும் இவ்வாறு சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2018/2019 பெரும்போகத்துக்கான தகுந்த விதை நெல்லினைப் பெற்றுக் கொள்வதும் விவசாயிகளுக்கு கடினமான பணியொன்றாக அமைந்துள்ளது. இதற்கிணங்க பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2018/2019 பெரும்போகம் சார்பில் விதைநெல் கொள்வனவு செய்வதற்காக சேதமடைந்த அளவுக்கு சமமாக ஏக்கர் ஒன்றுக்கு 1,500/- ரூபாவிலிருந்து 3,000/- ரூபா வரை விதைநெல் கொள்வனவு செய்வதற்காக நட்டஈடு வழங்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினாலும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.