2018-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
“பொருளாதார அபிவிருத்தியை நோக்கிய உயிரின பல்வகைமை வலுசக்தி 2022” கருத்திட்டம் - இலங்கையின் வலுசக்தி தேவைக்கு பெற்றோலியம், நிலக்கரி போன்ற எரிபொருள்களை இறக்குமதி செய்வதற்கு செலவாகும் அந்நிய செலாவணியின் அளவினை குறைக்கும் நோக்கில் உள்நாட்டு வலுசக்தி வளங்களின் பாவனையை பரவலாக்கும் முக்கியத்துவம் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 50 உயிரின பல்திரள் அல்லது தாவர பொருட்களை சேர்த்தல் மற்றும் விநியோகித்தல் நிலையங்களை நாடு முழுவதும் தாபிப்பதன் மூலம் 1,000 புதிய தொழில்முயற்சியாளர்களுக்கு உயிரின பல்திரள் செய்கையின்பால் ஈடுபடுத்துவதற்கும் கமத்தொழில் கழிவுகளிலிருந்து உயிரின பல்திரள் தயாரிப்பதற்காக ஈடுபடுத்துவதற்கும் இதன் பொருட்டு நவீன தொழினுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கும் “உயிரின பல்வகைமை வலுசக்தி 2022” என்னும் பெயரில் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அரசாங்க தனியார் அதேபோன்று வௌிநாட்டு உதவிகளுடன் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் (கலாநிதி) ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |