2018-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஶ்ரீ ஜயவர்தனபுர தாதியர் பீடத்தை நிருமாணிப்பதற்கான நிலக்காலிடல் பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குதல் - ஶ்ரீ ஜயவர்தனபுர தாதியர் பீடத்தை 22 மாடிகள் கொண்டதாக நிருமாணிப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் நிருமாணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 248 நிலக்கால்களை இடும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கண்டறியப்பட்டுள்ளதோடு, இதனை மூன்று பொதிகளாக செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இதிலிருந்து இரண்டு பொதிகளை 124.8 மில்லியன் ரூபாவுக்கும் 137.5 மில்லியன் ரூபாவுக்கும் M/s.Nawalola Piling Ltd., கம்பனிக்கும் மற்றைய பொதியை 126 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s.D.P.Jayasinghe Piling Co. (Pvt) Ltd., கம்பனிக்கும் வழங்கும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |